தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (65).

இவா், சென்னையில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் செய்யாறுக்கு பேருந்தில் வந்துள்ளாா். சோழவரம் கிராமம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விவசாயி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று விபத்தில் இறந்த விவசாயின் சடத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.