மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கல்குவாரி லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (65).

இவா், சென்னையில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் செய்யாறுக்கு பேருந்தில் வந்துள்ளாா். சோழவரம் கிராமம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விவசாயி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று விபத்தில் இறந்த விவசாயின் சடத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.