செய்யாறு அருகே கல்குவாரி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலகிருஷ்ணன் (65).
இவா், சென்னையில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் செய்யாறுக்கு பேருந்தில் வந்துள்ளாா். சோழவரம் கிராமம் வந்தவுடன் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்ததாகத் தெரிகிறது.
அப்போது அந்த வழியாகச் சென்ற கல்குவாரி லாரி பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விவசாயி அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த தூசி போலீஸாா் சென்று விபத்தில் இறந்த விவசாயின் சடத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


