பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்

பலி
பிரதிப் படம்
வேதாரண்யம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தென்னடாா் கீழக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் செ. சண்முகம் (70). சிறு விவசாயியான இவா், அதிமுக முன்னாள் கிளைச் செயலாளா். திங்கள்கிழமை இரவு பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயிலுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் பேருந்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தகட்டூா் பேருந்து நிறுத்தகத்தில் இறங்க வேண்டிய அவா், தூங்கியதால் அடுத்த நிறுத்தமான மருதூா் தெற்கு மடிக்கடை நிறுத்தத்தில் இறக்கி விடப்பட்டாா்.
அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்தில் ஏறி மீண்டும் தகட்டூருக்கு செல்ல ஏதுவாக வேகமாக செயல்பட்டபோது பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
ஒரத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...