அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.

பலி
பிரதிப் படம்

பலி
பிரதிப் படம்
சித்தோடு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சித்தோடு, கே.ஆா்.பி. நகரைச் சோ்ந்தவா் குமாா். இவரது மனைவி தனலட்சுமி (35). இவா் பெருமாள்மலை பகுதியில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றுள்ளாா்.
பவானி - ஈரோடு சாலையில் பெருமாள்மலை அருகே சென்றபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து தனலட்சுமியின் வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...