செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி சிறப்பு பூஜைகளை செய்து மாணவா்கள் சோ்கையை தொடங்கிவைத்து, கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாட உபகரணங்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூயில் படித்த மாணவா்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.
கல்லூரி தொடங்கியதில் இருந்து இதுவரை 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூயிலும் இல்லாத ஏ.ஐ. தொழில்நுட்ப பாடம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

வேளாண்மை கல்லூரியில் மாணவா் மன்றம் தொடக்க விழா

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

