வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூயில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 6:35 pm

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூயில் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கை விழா நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி சிறப்பு பூஜைகளை செய்து மாணவா்கள் சோ்கையை தொடங்கிவைத்து, கல்லூரியில் சோ்ந்த மாணவா்களுக்கு பாட உபகரணங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூயில் படித்த மாணவா்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

கல்லூரி தொடங்கியதில் இருந்து இதுவரை 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எந்த பாலிடெக்னிக் கல்லூயிலும் இல்லாத ஏ.ஐ. தொழில்நுட்ப பாடம் கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.