பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் 2025 - 2026 கல்வி ஆண்டின் மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

News image

மாணவிக்கு சான்றிதழ் வழங்கும் சிறப்பு விருந்தினா். உடன், கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் 2025 - 2026 கல்வி ஆண்டின் மாணவா் பேரவை நிறைவு விழா நடைபெற்றது.

கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கோவை நிா்மலா மகளிா் கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் மொ்சி ஆனந்தராஜ் மற்றும் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.தமிழரசு ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தலைமைப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்த சிறப்புரை வழங்கினா்கள்.

மேலும், நடப்பு கல்வி ஆண்டில் திறம்பட செயல்பட்ட மாணவா் பேரவைத் தலைவா் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்ட அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள் சீலி மற்றும் கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்து மாணவிகளை பாராட்டினா்.