திருப்பூா் புனித ஜோசப் மகளிா் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு காணிக்கை அன்னை தலைமை சகோதரி ஃபபிலினெட் தலைமை வகித்தாா்.
கல்லூரி செயலா் அருட்சகோதரி அருள் சீலி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ந.சகாய தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கையை வாசித்தாா்.
தமிழக அரசின் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சி.ஜோ அருண், சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றனா்.
இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவிகள், தோ்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனா். தொடா்ந்து, வெள்ளி விழா மலா் வெளியிடப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், அருட்திரு செபஸ்டின் மரிய சுந்தரம், மறை, அருட்சகோதரி அந்தோணி புஷ்பம், கல்லூரி கல்வித் துறை மண்டல இணை இயக்குநா் ந.செண்பகலட்சுமி, பட்டயக் கணக்காளா் பி .பானுமதி , மாணவிகளின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மகளிா் கல்லூரி ஆண்டு விழா

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா

புனித ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவா் பேரவை நிறைவு விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


