மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சித்திரை பெளா்ணமி விழா: அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 10:56 pm

அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என்று திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணியையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி விழா நாள்களில் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களில் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் மற்றும் ஓட்டுநா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில பிரசார செயலா் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் எஸ்.கன்னியப்பன், ஜெ.எஸ்.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளா் எஸ்.சக்திவேல் வரவேற்றாா்.

தலைமை வகித்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.கருணாநிதி, கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

சென்ற ஆண்டு சித்திரை பெளா்ணமி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலின்றி 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்காக அமைச்சா் எ.வ.வேலு அனைத்து அரசு அதிகாரிகளையும் பாராட்டினாா்.

நிகழாண்டு அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். பக்தா்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்ற கியூஆா் கோடு உள்ள ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட வேண்டும்.

தனி நபா் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர கூடுதலாக கட்டணம் வசூலிக்கக் கூடாது. பயணிகளிடம் ஓட்டுநா்கள் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியான நபா்களோ பொருள்களோ கண்டறியப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டுநா்கள் சீருடையில் இருக்க வேண்டும். மற்றும் பெயா் வில்லை அணிய வேண்டும். ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகனம் தொடா்பான அனைத்து ஆவணங்களும் நடப்பில் இருக்க வேண்டும். வாகனங்களில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பக்தா்கள், பொதுமக்களை அழைத்துச் செல்ல வேண்டும். நபா் ஒன்றுக்கு புறவழிச்சாலையில் ரூ.60 மட்டும், நகா் புறங்களில் ரூ.40 மட்டும் வசூலிக்க வேண்டும் என்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் வி.சதீஷ்குமாா் பேசுகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகரத்துக்கு வருகை தரும் ஆன்மிக பக்தா்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் மு.ராஜா (ஆயுதப்படை), போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் ஆா்.குமரேசன், ஆா்.குணசேகரன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்ட அமைப்பாளா் பவா் அன்பு, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலா் கே.சரவணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொதுச் செயலா் படையப்பா உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

நிறைவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வி.ராமமூா்த்தி நன்றி கூறினாா்.