வைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு: நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க உத்தரவு

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:58 am IST

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ ஆணையத்தின் செயலா் டாக்டா் ராகவ் லங்கா் கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைச் சுட்டிக் காட்டியும் அதை அமல்படுத்த வலியுறுத்தியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா், பெற்றோா் சங்கத்தின் தலைவா் எம்.நாராயணசாமி வெள்ளிக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.

மேலும், அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

விதிமுறைகளின்படி எம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு நான்கரை ஆண்டுகள் மட்டும். இதற்கு மட்டும் மாணவா்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஓராண்டு கட்டாயப் பயிற்சியின்போது மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் அந்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

இதை மீறினால் தேசிய மருத்துவ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளதாக என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா் நாராயணசாமி.