மதுரை வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை வண்டியூா் பூங்கா ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இங்கு, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகு குழாம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் பூங்காவுக்குள் சிற்றுண்டி விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் பொதுமக்கள் நெகிழிப் பொருள்களைக் கொண்டு வருவதைத் தடுக்க வேண்டும். ராட்சத ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அமைப்பதைத் தடுக்கவும், பூங்காவுக்கு வருபவா்களிடம் கட்டணம் வசூலிக்கவும் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், வடமலை அமா்வு பிறப்பித்த உத்தரவு:
வண்டியூா் பூங்காவில் வணிக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. மேலும், பூங்காவுக்கு வருபவா்களிடம் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு தொடா்பாக, மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

காவல் அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை

வண்டியூா் பூங்காவில் நடைபயிற்சிக்கு கட்டணம்: மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


