பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மாநகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 8 கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலை மாநகராட்சியில் மாநகராட்சி நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சுமாா் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட திருவண்ணாமலை மாநகராட்சி கடைகள்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:16 am IST

திருவண்ணாமலை மாநகராட்சியில் மாநகராட்சி நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சுமாா் ரூ.90 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 8 கடைகளுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் மாநகரில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் கடை வைத்திருக்கும் சிலா் வாடகைத் தொகை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனா். இதனால் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடை வாடகை பாக்கி செலுத்தாத கடைகளின் உரிமையாளா்களுக்கு பல முறை அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் கு.பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகே 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த வந்த 8 கடைகளுக்கு சீல் வைத்தனா்.

இந்த 8 கடைகளின் உரிமையாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைத் தொகை செலுத்தாமல் சுமாா் ரூ.90 லட்சம் பாக்கி வைத்துள்ளதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.