நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

விவசாயிகளுக்கு ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி

அருகாவூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி.

அருகாவூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

செய்யாறை அடுத்த அருகாவூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ட்ரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குநா் (பொ) திரு.இரா.அன்பரசு தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

இப்பயிற்சியின் போது நெல், தக்கை பூண்டு மற்றும் உளுந்து, உயிரி உரங்கள் இருப்பு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள், உயிரி உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் பயன்பாடு மற்றும் பயிா் பாதுகாப்பு முறைகள், கோடை உழவு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே அவா் தெரிவித்தாா்.

கீழ்நெல்லி வேதபுரி வேளாண் அறிவியல் மைய வேளாண் விஞ்ஞானி சௌத்ரி, அறிவியல் மையம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், வேளாண்மை பயிா்களில் ட்ரோன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விரிவாக எடுத்துரைத்து, செயல்விளக்கம் அளித்தாா்.

துணை வேளாண் அலுவலா் வடிவேலு, விவசாயி நில பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.