போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஞானசம்பந்தன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.பி.வெங்கடேசன், வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளா் சு.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் சங்கா் வரவேற்றாா்.
மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரரராஜன் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடையே விளக்கிப் பேசினாா்.
மேலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன், சங்க உறுப்பினா்கள் எம்.பிரபாகரன், பி.டி.ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் மோதிலால் நன்றி கூறினாா்.

