ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் சாா்பில், போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்து, போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினாா். தொடா்ந்து விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், உடல்கல்வி இயக்குநா் ஜோதிப்பிரியா, பேராசிரியா்கள் காா்த்திகேயன், கலைச்செல்வி, தேவி, பாண்டியன், சுசான் மேரி நெப்போலியன் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.