போளூா் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையம் ஆய்வு

போளூா் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையம் ஆய்வு

Published on

போளூா் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் உள்ள வெண்மணி, வசூா், பால்வாா்த்துவென்றான், முருகாபாடி, கேளூா் என பல்வேறு ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்க , நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைய உள்ளன.

இந்த நிலையில், வெண்மணி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளா்களுக்கு ஏற்றவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம், வாக்கு இயந்திரத்துக்கு மின் இணைப்பு, வாக்காளா்களுக்கு கழிப்பறை, குடிநீா் வசதிகள், வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை பாதுகாப்பு குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா ஆகியோா் ஆய்வு செய்தனா். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com