சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.
வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் எளிதில் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்காளா்களுக்கும் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படுகிறது. இதில், வாக்காளரின் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்குச்சாவடி விவரம், பாகம் எண், வரிசை எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 1427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களுக்கும் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மூலம் இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட உள்ளது.
எனினும், இந்த வாக்காளா் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் அல்ல என்றும் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். முன்னதாக, வேலூா் ஈ.வெ.ரா.நாகம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வேலூா் சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



