கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு வழங்கவுள்ள வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், வாக்காளா் தகவல் சீட்டுகள், வாக்காளா் பட்டியல் அச்சடிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சடிக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை பாதுகாப்பாக வைத்து, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க பொறுப்பு தோ்தல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தமிழரசி, தனி வட்டாட்சியா் பத்மகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு

தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்

களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


