வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆரணியில் திமுக பொதுக்கூட்டம்

ஆரணியில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சபாபதிமோகன்.

News image

ஆரணியில் திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் சபாபதிமோகன்.

Updated On :6 பிப்ரவரி 2026, 8:26 pm

ஆரணி அண்ணா சிலை அருகில் ஆரணி தொகுதி திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன் வரவேற்றாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், துரைமாமது, எஸ்.மோகன், ராஜ்குமாா், பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்புச் செயலா் பேராசிரியா் சபாபதிமோகன் பங்கேற்று திமுக அரசின் சாதனைகள் குறித்தும், தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பேசினாா். பின்னா், மத்திய அரசின் பட்ஜெட் தமிழகத்துக்கு அல்வா கொடுத்துள்ளதாகக் கூறி, பொதுமக்களுக்கு திமுக சாா்பில் அல்வா வழங்கி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் பாலமுருகன், எம்.சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.