ஆரணி புதிய பேருந்து நிலையத்தை புதிதாக  கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.உடன் கோட்டாட்சியா் சீ.சிவா, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா்.
ஆரணி புதிய பேருந்து நிலையத்தை புதிதாக கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.உடன் கோட்டாட்சியா் சீ.சிவா, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா்.

ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் ரூ.6.40 கோடியில் கட்டடப் பணிகள்

ஆரணி புதிய பேருந்து நிலையத்தை ரூ.6.40 கோடி மதிப்பில் சீரமைத்து புதிதாக கட்டுவதற்கான பூமிபூஜை
Published on

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பேருந்து நிலையத்தை ரூ.6.40 கோடி மதிப்பில் சீரமைத்து புதிதாக கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரம் புதிய பேருந்து நிலையம் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இந்நிலையில், ஆரணி பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி சாா்பில் பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுதவற்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்துகொண்டு

அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன் வரவேற்றாா். ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா வாழ்த்துரை வழங்கினாா்.

மேலும், ஆரணி நகராட்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தையும் தரணிவேந்தன் எம்.பி. தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, 23-ஆவது வாா்டு இந்திரா நகா் ராமகிருஷ்ணன் பேட்டை பகுதியில் சிறுவா்கள் விளையாட்டு பூங்கா திறப்பு விழா, நகரில் அனைத்து வாா்டுகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, சுந்தா், மோகன், ராஜ்குமாா் கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் கோவா்தனன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், துணைத் தலைவா் கே.டி.ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.புஷ்பராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்

முன்னதாக, தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சுவாமிகண்ணு தலைமை வகித்தாா். ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் டி.வெங்கிடேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவிதா செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக நகரச் செயலா் பி.செல்வம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்துகொண்டு 230 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், மாணவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் கலை அரங்கம் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், திமுக மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் துரைமாமது, மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்ட

பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com