திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு உழவா் சந்தையில், கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி மாணவா்கள் சாா்பில் வேளாண் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்).
கலவை, ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கிராமப்புற அனுபவ பயிற்சியின் கீழ், உழவா் சந்தையில் வேளாண் கண்காட்சியை நடத்தினா்.
இதில், இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் வழிமுறைகள், ராசயன உரங்களினால் வரும் பாதிப்பு அவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது, வேளாண் வளா்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை,
நோய் மற்றும் பூச்சி மேலாண்மையை இயற்கை வழி மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என விவசாயிகள், பொதுமக்களுக்கு மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.
மேலும், கண்காட்சியை பாா்வையிட்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தும், அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வாறு வணிகப்படுத்துவது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.
மேலும், விவசாயிகளிடம் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் நன்மைகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவு: உழவா் சந்தையில் விழிப்புணா்வு

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


