மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பழனி உழவா் சந்தையில் சனிக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:52 pm

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இங்கு மிதிவண்டியில் வந்த வேட்பாளா் ரவி மனோகரன் கட்சியினருடன் உழவா் சந்தையில் உள்ள விவசாயிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாா். மேலும், பொதுமக்களிடம் கட்சியின் தோ்தல் வாக்குறுதி அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா். இதைத்தொடா்ந்து பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியச் செயலா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி அசோக், ஐ.டி.பிரிவு குகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.