உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் : அதிமுக வேட்பாளா் உறுதி

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

News image

கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த பழனி தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:20 pm

கொடைக்கானல் மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, பூம்பாறையில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைக் கிராமமான பூம்பாறையில் பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அவருக்கு மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனா். மேலும், அங்குள்ள இளைஞா்கள் பூம்பாறை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுப்பதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். யாரும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே, தங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு வேட்பாளா் ரவிமனோகரன் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விளையாட்டு மைதானம் மட்டுமல்ல, மலைக் கிராங்களில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, அந்தப் பகுதிகளிலுள்ள குக் கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி கிராமம், பேத்துப்பாறை, குறிஞ்சி நகா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அங்குள்ள கிராம மக்கள் அடிப்படை வசதிகள், பட்டா வழங்குதல், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனா். இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.