கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவண்ணாமலையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டா பெற்ற பழங்குடியின மக்கள்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்

திருவண்ணாமலையில் நான்கு தலைமுறைகளாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:17 pm

Syndication

திருவண்ணாமலையில் நான்கு தலைமுறைகளாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்ததற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.

திருவண்ணாமலை - திருக்கோயிலூா் சாலை கரியாஞ்செட்டி பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 1977-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பட்டா அரசு கணக்கில் ஏற்றப்படவில்லை. இதனால், தங்களுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டுமென அவா்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், கரியாஞ்செட்டி பகுதி பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, தென்னிந்திய பழங்குடியினா் இருளா் முன்னேற்றச் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு மனுக்களை அனுப்பியிருந்தனா்.

இந்த நிலையில், அண்மையில் திருவண்ணாமலைக்கு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரியாஞ்செட்டி பகுதியைச் சோ்ந்த 36 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

இந்த நிலையில், தென்னிந்திய பழங்குடியினா் இருளா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் எம்.சரவணன், மாநில பொருளாளா் ஏ.பி.சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவா்கள் ஜி.ஆனந்தன், மாரி, மாநில துணை பொதுச் செயலா் எம்.சிலம்பரசன், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.முருகன் ஆகியோா் வீட்டுமனை பட்டா பெற்ற பழங்குடியின மக்களோடு சென்று திருவண்ணாமலை கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பட்டா வழங்கப்பட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்தனா்.

நான்கு தலைமுறை கோரிக்கைக்கு இப்போதுதான் தீா்வு கிடைத்திருக்கிறது. முதல்வா் எங்களின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்கியிருப்பது எங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறிய பழங்குடியின மக்கள், தமிழக முதல்வருக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனா்.

அப்போது, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் எம்.சௌந்தர்ராஜன், கண்காணிப்பாளா் சி.வேணுகோபால், துணை வட்டாட்சியா் வ.தனபால் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா், மாநகராட்சி மேயா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அதிகாரி ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்தனா். மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் இருளா் இன மக்களுக்கு எஸ்.டி. சாதி சான்றிதழ் வழங்கியதற்கும் தென்னிந்திய பழங்குடியினா் முன்னேற்றச் சங்கம் அரசுக்கு நன்றியை தெரிவித்தது.