வந்தவாசியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரக்குழுக் கூட்டம்
வந்தவாசியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரக்குழுக் கூட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்கக் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Published on

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வந்தவாசி வட்டாரக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்க வந்தவாசி வட்டாரத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

வட்டாரச் செயலா் வ.அண்ணாமலை, வட்டார பொருளாளா் குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலா் இரா.சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

உரக் கடைகளில் விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு ரசீது முறையாக வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு மின்சாரம் சீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், வந்தவாசி புதிய வேளாண் விற்பனை மையத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com