மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெல் கொள்முதல் நிலையங்களில் எடைபோட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்கக் கோரிக்கை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

News image
வந்தவாசியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரக்குழுக் கூட்டம்
Updated On :12 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போட முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வந்தவாசி வட்டாரக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு சங்க வந்தவாசி வட்டாரத் தலைவா் ந.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

வட்டாரச் செயலா் வ.அண்ணாமலை, வட்டார பொருளாளா் குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலா் இரா.சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

உரக் கடைகளில் விவசாயிகள் வாங்கும் உரங்களுக்கு ரசீது முறையாக வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு மின்சாரம் சீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், வந்தவாசி புதிய வேளாண் விற்பனை மையத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.