விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் வாா்ஷிக உற்சவம்

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வாா்ஷிக உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீயோக நரசிம்மா்.
Updated On :27 ஜனவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோயிலில் வாா்ஷிக உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2024-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, இந்த 2-ஆம் ஆண்டு வாா்ஷிக உற்சவம் நடந்தது.

இதையொட்டி திருமஞ்சன பொருள்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.