கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்துவைத்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
Published on

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் ரூ.13.16 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கண்ணமங்கலம் பேரூராட்சியில் நியாயவிலைக் கடை இன்றி நீண்ட தொலைவு சென்று பொருள்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

மேலும், புதிதாக நியாயவிலைக் கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும், மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நுழைவுவாயில் கட்டடம் அமைத்துத் தரும்படியும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில், 2023-24 நிதியாண்டு சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து

ரூ.20 லட்சத்து 16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, அதில், ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை கட்டடத்தையும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கட்டடமும் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா வியாழக்கிழை நடைபெற்றது.

இதில் அதிமுக பேரூா் செயலா் பாண்டியன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சேவூா் எஸ்.ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டியும், கல்வெட்டினை திறந்து வைத்தும் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவரத்தனன், செயல் அலுவலா் முனுசாமி, ஒன்றியச் செயலா்கள் திருமால், ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி ஜெயலலிதா பேரவைச் செயலா் செல்வம், அதிமுக ஆரணி நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com