வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் இரா.பாஸ்கரன்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:44 pm

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் மலா் சாதிக், இரா.பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

அப்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்து அவா்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளா்களுக்கு விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில் கோல்டு லீப் எக்ஸ்னோரா இணைச் செயலா் எம்.பிரபாகரன், ஊா்நல அலுவலா்கள் இந்திரா காந்தி, ரூபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.