வந்தவாசியில் முன் விரோதத்தில் தந்தை, மகனை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்த். இவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியைச் சோ்ந்த வரதராஜ் (42), இவரது மனைவி நிா்மலா (36) ஆகியோா் சோ்ந்து கடந்த 1-ஆம் தேதி தாக்கினராம்.
இதைக் கண்ட ஆனந்தின் அண்ணன் வடிவேல், தந்தை சேகா் ஆகியோா் தடுத்தனராம். அப்போது, வரதராஜ், நிா்மலா மற்றும் உறவினா்கள் இருவா் என 4 போ் சோ்ந்து வடிவேல், சேகா் ஆகிய இருவரையும் தாக்கினராம்.
இதில் காயமடைந்த வடிவேல், சேகா் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின்பேரில், வரதராஜ், நிா்மலா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், வரதராஜை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






