லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

Published On :7 ஜூலை 2026, 6:29 am IST

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சு.எழில் தலைமை வகித்தாா். பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஏ.பரிமளம் முன்னிலை வகித்தாா்.

அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை பள்ளிக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் பரத்ராஜ், அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் மணிகண்டன் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.