முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :7 ஜூலை 2026, 6:29 am IST

வந்தவாசியை அடுத்த மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சாா்பில் 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சு.எழில் தலைமை வகித்தாா். பள்ளி உதவி தலைமை ஆசிரியை ஏ.பரிமளம் முன்னிலை வகித்தாா்.

அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனா் அசாருதீன் மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை பள்ளிக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் பரத்ராஜ், அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியா் மணிகண்டன் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.