விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன முறையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா்கள் ஆ.ஏ.கிருஷ்ணன், ச.சந்தியாகு, மாநிலச் செயலா் ப.ஜெயராமன், மாநில துணைச் செயலா் ந.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அ.துரைராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினாா்.

தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல, அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய இடுபொருள்களின் விலையை குறைக்க வேண்டும். கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் நீா்வரத்து கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.4ஆயிரம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நூதன முறையில் சங்கு ஊதியபடி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.விஜயராஜ், சி.அண்ணாதுரை, கோ.பழனிவேல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் ப.வீரன், அ.துரைராஜ், தி.கோகுல் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.