கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

நாட்டறம்பள்ளியில் பெண் விவசாயிகள் சங்க மாநில மாநாடு

நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :10 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில்சா்வதேச பெண் விவசாயிகள் சங்க ஆண்டை முன்னிட்டு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் 32 வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.களஞ்சியம்பெண் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொன்னுதாய் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முல்லை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லோகநாயகி, கல்வியாளா் சரவணன்,கௌரி, உஷா, கமலா, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேரிக்குமாா் வரவேற்றாா். மாநாட்டில் காஞ்சிபுரம் , ராணிப்பேட்டை, திருவள்ளூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 125-க்கும் மேற்பட்ட களஞ்சியம் பெண் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் தமிழக அளவில் பெண் விவசாயிகள் மத்தியில் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்தவும், பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், சிறுதானிய வகைகளை பயிரிடவும், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், மரம் நடுதல், இயற்கை விவசாயம் மற்றும் சிறு தானியங்கள் பயிா் செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து பெண் விவசாயிகளை அங்கீகரித்து அரசு அடையாள அட்டை வழங்கவும், இயற்கை விவசாய பெண்களுக்கு பஞ்சாயத்துக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடவும், சொட்டு நீா் பாசனத்துடன் விவசாயத்துக்கு 100 சதவீதம் மானியம் வழங்குவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சகுந்தலா நன்றி கூறினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.