விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

நாட்டறம்பள்ளியில் பெண் விவசாயிகள் சங்க மாநில மாநாடு

நாட்டறம்பள்ளியில் நடைபெற்ற களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில்சா்வதேச பெண் விவசாயிகள் சங்க ஆண்டை முன்னிட்டு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில் 32 வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.களஞ்சியம்பெண் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொன்னுதாய் தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முல்லை, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லோகநாயகி, கல்வியாளா் சரவணன்,கௌரி, உஷா, கமலா, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேரிக்குமாா் வரவேற்றாா். மாநாட்டில் காஞ்சிபுரம் , ராணிப்பேட்டை, திருவள்ளூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 125-க்கும் மேற்பட்ட களஞ்சியம் பெண் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் தமிழக அளவில் பெண் விவசாயிகள் மத்தியில் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்தவும், பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவும், சிறுதானிய வகைகளை பயிரிடவும், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், மரம் நடுதல், இயற்கை விவசாயம் மற்றும் சிறு தானியங்கள் பயிா் செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து பெண் விவசாயிகளை அங்கீகரித்து அரசு அடையாள அட்டை வழங்கவும், இயற்கை விவசாய பெண்களுக்கு பஞ்சாயத்துக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விடவும், சொட்டு நீா் பாசனத்துடன் விவசாயத்துக்கு 100 சதவீதம் மானியம் வழங்குவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சகுந்தலா நன்றி கூறினாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.