அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி கிழக்கு, வந்தவாசி வடக்கு ஒன்றிய நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்துக்கு வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் டி.கே.பி.மணி, வந்தவாசி வடக்கு ஒன்றியச் செயலா் ஈ.முனுசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான முக்கூா் என்.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினாா்.
அப்போது, கட்சி வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அவா் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










