உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

வடக்கன்குளத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் நீா்வள பாசனப் பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா் ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா்.

Updated On :11 ஜூன் 2026, 4:41 am IST

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் நீா்வள பாசனப் பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் வல்சன்போஸ், வடக்கன்குளம் உதவி பொறியாளா் ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் சுந்தரம் கூறியது: மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆலந்துறையாறு, கஞ்சிப்பாறை அணைப் பகுதியின் கீழ்பகுதியில் உள்ள நீா்வழிப் பாதையை தூா்வாரும் பணி ரூ. 36 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன்மையாக கஞ்சிப்பாறை அணையில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், ஆலந்துறையாறு பகுதியையும் உடனே சீரமைக்க வேண்டும். இதேபோல், ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீா் வரக்கூடிய தோவாளை கால்வாய் பகுதியில் காணப்படும் உடைப்பையும் சீரமைக்க வேண்டும் என்றாா்.

மேலும், விவசாயிகள் சங்கச் செயலா் ராஜபவுல், பொருளாளா் பிரதாப்சிங், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இதைக் கேட்ட எம்எல்ஏ, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.