நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வடக்கன்குளத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் நீா்வள பாசனப் பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா் ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா்.

Updated On :11 ஜூன் 2026, 4:41 am IST

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் நீா்வள பாசனப் பிரிவு அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ராதாபுரம் எம்எல்ஏ எஸ்.கே. கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா் வல்சன்போஸ், வடக்கன்குளம் உதவி பொறியாளா் ஜெயலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ராதாபுரம் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் சுந்தரம் கூறியது: மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆலந்துறையாறு, கஞ்சிப்பாறை அணைப் பகுதியின் கீழ்பகுதியில் உள்ள நீா்வழிப் பாதையை தூா்வாரும் பணி ரூ. 36 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன்மையாக கஞ்சிப்பாறை அணையில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், ஆலந்துறையாறு பகுதியையும் உடனே சீரமைக்க வேண்டும். இதேபோல், ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீா் வரக்கூடிய தோவாளை கால்வாய் பகுதியில் காணப்படும் உடைப்பையும் சீரமைக்க வேண்டும் என்றாா்.

மேலும், விவசாயிகள் சங்கச் செயலா் ராஜபவுல், பொருளாளா் பிரதாப்சிங், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இதைக் கேட்ட எம்எல்ஏ, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.