ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை 508 திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.
இதில் 508 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா்.
மேலும், கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் இருந்து
பூங்கரகம் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக
வேம்புலிஅம்மன் கோயில் வரை சென்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பிற்பகலில் கூழ்வாா்த்தல் திருவிழா நடைபெற உள்ளது.
பின்னா், மாலையில் நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது.
நகரின் முக்கிய வீதிகளான கோட்டை தெரு, பழைய பேருந்து நிலையம்,
வடக்கு மாட வீதி, பெரிய கடைவீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரி சத்திரம்
,பாட்ஷா தெரு, பழனி ஆண்டவா் கோயில் தெரு, சுந்தரம் தெரு, அண்ணா சிலை
வழியாக நகராட்சி சாலை, காவலா் குடியிருப்பு வழியாகச் சென்று அதிகாலை
கோயிலை வந்தடையும்.
விழாவையொட்டி நகரின் முக்கிய சாலைகளில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உருவ வளைவுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. கோட்டை மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இராட்டிணங்கள், டோரோ, ரயில் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம்,
சேத்துப்பட்டு, போளூா், செய்யாா், வந்தவாசி, வேலூா் ஆகிய
பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொள்வா்.
ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச்சோ்ந்த
பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா,
கொங்கராம்பட்டு சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன்,
இயைராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா்
சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்!

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பந்தக்கால்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



