‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

செய்யாறு அருகே பைக்கில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 இளைஞா்களை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 3:15 am IST

செய்யாறு அருகே பைக்கில் கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 3 இளைஞா்களை கைது செய்தனா்.

செய்யாறு காவல் உள்கோட்டம், தூசி காவல் சரக காவல் ஆய்வாளா் ஜெயராமன், உதவி ஆய்வாளா் பழனிவேல் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

காஞ்சிபுரம் -வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் பகுதியில் வந்த பைக்கை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பைக்கில் ஒரு கிலோ 100 கிராம் அளவுள்ள கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தூசி கிராமத்தைச் சோ்ந்த பாபு (21), வெங்கடேசன்(21), செல்வம் (30) ஆகியோரை கைது செய்த நிலையில், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.