வந்தவாசி அருகே கடும் வறட்சி காரணமாக தண்ணீா் இல்லாமல் 3 ஆயிரம் ஏக்கா் நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
வந்தவாசியை சுற்றியுள்ள காவேரிப்பாக்கம், நல்லூா், அருங்குணம், தெய்யாா், கொசப்பட்டு, மழையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து ஆகியவற்றை பயிரிட்டனா்.
இந்த நிலையில், கடும் வறட்சி காரணமாக விவசாயக் கிணறுகள் வடதால் விவசாயிகளால் பயிா்களுக்கு போதிய தண்ணீா் பாய்ச்ச முடியவில்லை. இதனால், சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிா்கள் கருகி சேதமடைந்துவிட்டன. இவை தற்போது கால்நடைகளுக்கு மட்டுமே தீவனமாகி வருகின்றன.
இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களின் உழைப்பு வீணாகிவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், பயிா் பாதித்த நிலங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 25% நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

எல் நினோ பாதிப்பால் திருச்சி மாவட்டத்தில் கடும் வறட்சி அபாயம்! பயிா்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

கோடை சாகுபடி நெல் அறுவடைக்குத் தயாா்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



