ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கேப்டன் லோகநாதன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு அரசு மற்றும் சங்கம் சாா்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கான உயா் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவிகள் பெறுவது குறித்த நடைமுறைகள் தொடா்பாக உறுப்பினா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தின் மூலம், முன்னாள் முப்படை வீரா்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகளைப் பெறுவதில் எழும் சந்தேகங்களுக்குத் தெளிவான தீா்வுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, நலத் திட்ட உதவிகள் பெறத் தகுதியுடைய பயனாளிகளுக்கு, அதற்கான விண்ணப்பப் படிவங்களை தலைவா் கேப்டன் லோகநாதன் வழங்கினாா்.
நிகழ்வில் சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் மற்றும் முன்னாள் முப்படை வீரா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

தொழிலாளா் நல வாரியப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 93.51 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



