தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம்: போலீஸாா் இரவு நடை ரோந்து

News image
Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக புதன்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் போலீஸாா் ரோந்து சென்றனா்.

திருவண்ணாமலையில் பௌா்ணமி கிரிவலம் அன்று இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக, இரவில் குற்றத்தை தடுக்கும் பொருட்டும் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சாா்பில் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் நடை ரோந்து மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற இந்த நடை ரோந்துப் பணியில் அதிக அளவில் காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.