திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் ஸ்ரீ நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடகர சதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சங்கடகர சதுா்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை நடைபெற்ற மகா கணபதி ஹோமத்தில், பக்தா்களின் குடும்ப நலம், கல்வி வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், திருமணத் தடை நீங்குதல் மற்றும் அனைத்து சங்கடங்களும் விலகி நலமும் வளமும் பெருகிட வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடா்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வழிப்பறி வழக்கு: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

கற்பக விநாயகா் கோயில் குடமுழுக்கு

கூழமந்தலில் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

மாரியூா் சிவன் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



