காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

வழிப்பறி வழக்கு: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

செய்யாறு பகுதியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த வழிப்பறி குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 1:10 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த வழிப்பறி குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் கன்னிமாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராகவன் (62). இவா், செய்யாறு காவல் சரகப்பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், 2011-ஆம் ஆண்டில் இருந்து ராகவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்தாராம். ராகவனை கைது செய்ய அப்போது செய்யாறு உதவி அமா்வு நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின் பேரில் செய்யாறு போலீஸாா் பல ஆண்டுகளாக தேடி வந்தனா். இந்நிலையில் செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி

தலைமையிலான போலீஸாா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித்திரிந்த ராகவனை (62) சனிக்கிழமை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, செய்யாறு கூடுதல் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் ராகவனை ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.