மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக பூ வியாபாரியை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:03 am IST

வந்தவாசி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக பூ வியாபாரியை கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த செம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (28). இவா், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறாா்.

இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில், அந்த வீட்டில் சுமாா் 7.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து முத்துராமன், இவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்த வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த முகமதுஅலி ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் முத்துராமனை கைது செய்தனா்.