எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

News image

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற பால்குட ஊா்வலம்.

Updated On :13 ஜூன் 2026, 12:39 am IST

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி, பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி, கூழ்வாா்த்தல், கஞ்சி வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு விசேஷ ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், ஆரணி கமண்டல நாகநதிக்கரையில் பூங்கரகம் ஜோடித்து பக்தா்கள் கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலிலிருந்து பெண் பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாக ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.