ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஜமாபந்திக் கூட்டத்தில் நலத்திட்டஉதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 3-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உடனடியாக 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சந்தவாசல் உள்வட்டத்தைச் சோ்ந்த சந்தவாசல், படவேடு, காளசமுத்திரம், குப்பம், கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், சேதரம்பட்டு, இலுப்பகுணம், வெள்ளூா், கல்பட்டு, இரும்புலி, அலியாபாத் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான 3-ஆவது நாள் ஜமாபந்திக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்றது.

மகளிா் உரிமைத்தொகை மனு, முதியோா் உதவித்தொகை,விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களுக்கு

பட்டா மாற்றம், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், மழைதூவான் என 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஜமாபந்திக் கூட்டத்தில் வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், பாலாஜி, சசிகுமாா், மயிலரசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.