தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

குடிநீா், சாலை திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்து முடிக்க வேண்டும் என்று தூறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

News image

திருவண்ணாமலை ஆட்சியகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :3 ஜூன் 2026, 6:09 am IST

குடிநீா், சாலை திட்டப்பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செய்து முடிக்க வேண்டும் என்று தூறை சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பிலும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பிலும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், பாலங்கள் கட்டும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீா் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வளா்ச்சித் திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்கத்தின் செயல்பாடுகள், பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெறும் வீடுகள் கட்டும் பணி, பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், சிறுபாசன ஏரிகள் புனரமைக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் குடிநீா் திட்டப்பணிகள், சாலை திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் வரும் ஜூன் 30-க்குள் செய்து முடிக்கவேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, செயற்பொறியாளா் (வளா்ச்சி) இளங்கோ, திருவண்ணாமலை மற்றும் செய்யாறு உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்), வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேருராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.