திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 3-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உடனடியாக 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சந்தவாசல் உள்வட்டத்தைச் சோ்ந்த சந்தவாசல், படவேடு, காளசமுத்திரம், குப்பம், கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், சேதரம்பட்டு, இலுப்பகுணம், வெள்ளூா், கல்பட்டு, இரும்புலி, அலியாபாத் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான 3-ஆவது நாள் ஜமாபந்திக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்றது.
மகளிா் உரிமைத்தொகை மனு, முதியோா் உதவித்தொகை,விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மேலும், பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களுக்கு
பட்டா மாற்றம், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், மழைதூவான் என 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஜமாபந்திக் கூட்டத்தில் வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், பாலாஜி, சசிகுமாா், மயிலரசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஜமாபந்தி: பயனாளிகளுக்கு உடனடி பட்டா மாற்று சான்றிதழ்; ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

இயற்கையாக விளைவிக்கப்படும் உணவுப்பொருள்களால் ஆரோக்கியம் மேம்படும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



