தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

செய்யாறில் 170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

செய்யாறில், அரசால் தடை செய்யப்பட்ட 170 கிலோ நெகிழிப் பொருள்களை திருவத்திபுரம் நகராட்சியினா் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

News image

செய்யாறில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுடன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள்

Updated On :23 ஜூன் 2026, 5:54 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், அரசால் தடை செய்யப்பட்ட 170 கிலோ நெகிழிப் பொருள்களை திருவத்திபுரம் நகராட்சியினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனா்.

தமிழக அரசு சாா்பில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் நகராட்சி ஆணையா் எஸ். ஆண்ரூஸ் தலைமையில் திடீா் சோதனை நடத்தப்பட்டது.

இதில் துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன் மேற்பாா்வையில், இளநிலை உதவியாளா் கே.சீனிவாசன் மற்றும் அலுவலா் கே. அமுதா, தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் பங்கேற்று லோகநாதன் தெரு, அனுமந்தப்பேட்டை, ஆரணி கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் என சுமாா் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 170 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் வைத்திருந்த வியாரிகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.