/
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அருமனை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒருவா் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக காவல் நிலைய ஆய்வாளா் கமலாதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அருமனை தச்சூா் கோணம் பகுதியில் அனிஷ் (31) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு 65 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் கைப்பற்றி, அனீஷை கைது செய்தனா்.








