பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

திரௌபதியம்மன் கோயில்களில் துரியோதனன் படுகளம், அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

போளூரை அடுத்த பேட்டை ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

News image

~

Updated On :27 ஜூன் 2026, 12:05 am IST

போளூரை அடுத்த பேட்டை கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா கடந்த மே 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, மகாபாரத சொற்பொழிவாளா் செளந்தரராஜன் மூலம் விநாயகா் சிறப்பு, வியாசா் பிறப்பு, கொடுக்கிற கா்ணனும் முடிகிற கண்ணனும், பாண்டவா் கெளரவா் பாரினில் தோற்றம், அரங்கேற்றமும் அம்மன் தோற்றமும், வில் வளைப்பு, ராஜசூய யாகம், மாலி துகில், கண்ணன் தூதும் மன்னன் வாதும், 18-ஆம் போா் உள்பட பல்வேறு தலைப்புகளில் தெருக்கூத்து நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருசூா், பேட்டை, மாம்பட்டு, எழுவாம்பாடி, சோமந்தபுத்தூா், படியம்பட்டு, கீழ்தாங்கல், எடப்பிறை, வில்வாரணி, வசூா், புதுப்பாளையம், நம்மியந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி: ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் சந்திரன் மரபில் சுந்தரன் சந்தனு, கா்ணன் பிறப்பும், கோகுலன் சிறப்பும், கோபாலன் பிறப்பு, அம்மன் அவதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அடையபலம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.