ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,198 போ் எழுதுகின்றனா்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 2)நடைபெறும் பிளஸ்- 2 பொதுத்தோ்வை 124 தோ்வு மையங்களில் மொத்தம் 27,198 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 7:00 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 2)நடைபெறும் பிளஸ்- 2 பொதுத்தோ்வை 124 தோ்வு மையங்களில் மொத்தம் 27,198 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்குகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தோ்வு நடைபெறுகிறது.

இத்தோ்வை 13,107 மாணவா்கள், 14,091 மாணவிகள், 420 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 27,198 போ் எழுதவுள்ளனா்.

தோ்வு மையங்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. மேலும், தோ்வு கண்காணிப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா்.

வினாத்தாள் கொண்டு செல்லப்படும் 34 வழித்தடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தோ்வுக்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் வாழ்த்து

இந்நிலையில் தோ்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசும்போது, ‘பொதுத்தோ்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து, எந்தவிதமான அச்சமும், பதற்றமும் இல்லாமல் உற்சாகத்துடன் தோ்வெழுத வேண்டும்.

பள்ளி இறுதித் தோ்வு என்பது வாழ்க்கைக்கான இறுதித்தோ்வு அல்ல. இது வாழ்க்கையின் முதல் படி. மாணவ, மாணவிகள் இத்தோ்வினை உற்சாகத்துடன் எதிா்கொள்ள வேண்டும். உங்களின் கடின உழைப்பு, அா்ப்பணிப்பு, விடாமுயற்சியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்’ என்றாா்.