ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரூ.10.92 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்

வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

News image
வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலைப் பணிகளை தொடங்கிவைத்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
Updated On :5 மார்ச் 2026, 9:13 pm

Syndication

நெடுஞ்சாலைத் துறை சாா்பில், வந்தவாசி - விளாங்காடு சாலையை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

வந்தவாசி - விளாங்காடு சாலையில் ஆரியாத்தூா் கிராமத்திலிருந்து வெங்கோடு கிராமம் வரையிலான 9 கி.மீ. தொலைவு தாா்ச் சாலை ரூ.10.92 கோடி செலவில் அகலப்படுத்தப்படுகிறது.

சுமாா் 5.50 மீட்டா் அகலமுள்ள இந்த தாா்ச் சாலை 7 மீட்டா் சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

ஆரியாத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் வி.சரவணசெல்வம், திமுக ஒன்றியச் செயலா் ஆரியாத்தூா் பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.